என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
Byமாலை மலர்19 March 2022 10:04 AM GMT (Updated: 19 March 2022 10:04 AM GMT)
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
அரியலூர் அலந்துறையார் கோயில் சன்னதியிலுள்ள முருகனுக்கும், பெரம்பலூர் சாலையிலுள்ள பாலசுப்பிரமணியன் சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகமும்,
செந்துறை நெய்வனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்வசுப்ரணியர் திருக்கோவிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
இதே போல் திருமழபாடி, கீழப்பழுவூர், பொன்பரப்பி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர் ஆகிய பகுதிகளிலும் வி.கைகாட்டி, கயர்லாபத், அஸ்தினாபுரம்,
இலுப்பையூர்,இறவாங்குடி, சோழன்மாதேவி, வனதிராயன்பட்டினம், கீழஎசனை, குருவாடி ஆகிய கிராமங்களில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் காவடி எடுத்து அபிஷேகம் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X