என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபிஷேகபாக்கம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவியை போலீஸ் ஐ.ஜி.சந்திரன் வாழ்த்திய போது எடுத்த பட
    X
    அபிஷேகபாக்கம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவியை போலீஸ் ஐ.ஜி.சந்திரன் வாழ்த்திய போது எடுத்த பட

    சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்-போலீஸ் ஐ.ஜி.சந்திரன் தகவல்

    புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்று போலீஸ் ஐ.ஜி.சந்திரன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:
    தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப் பாக்கம் சேத்தினால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான நல்லொழுக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜகுமாரி வரவேற்றார்.  

    ஆசிரியர் முருகன் பள்ளி பற்றிய சாதனையை விளக்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி.சந்திரன் கலந்து கண்டு நல்லொழுக்கம் பற்றிய சிறப்பு கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அவர் பேசியதாவது:&

    புதுவையில்  போலீசுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடக்காத அளவிற்கு பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    ஒவ்வொருவரின் வினா-விடைத்தாள்கள் அவர்களே பார்த்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி இடைத்தரங்களை நம்பி ஏமாற வேண்டாம். தொடர்ந்து படிப்பது, கடின முயற்சி இவைகளே ஒவ்வொரு வரையும் வெற்றிக்கு கொண்டு செல்லும்.

     புதுச்சேரியில் மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.

    நல்ல கல்வியை கற்று தேர்ச்சி அடைய வேண்டும். குறுக்கு வழியை தேடி நேரத்தை வீணாக்கி கொள்ளாதீர்கள். மாணவர்கள் பல உயர் படிப்புகளை பற்றிய சிந்தனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

    தற்பொழுது இது போன்ற உயர் கல்வி படித்து முடித்து வேலைக்கு செல்பவர்கள் லட்சக்கணக்கில் சம்பளமாக பெறுகிறார்கள். இதனை மனதில் கொண்டு மாணவர்கள் விழிப்புடன் கல்வி, உழைப்பு மட்டுமே உறுதுணையாக கொண்டு செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு பள்ளியின் சிறப்புகளை பற்றியும் கடந்த காலங்களில் அரசு பள்ளியில் படித்த அனுபவங்களை மாணவர்களுடன் ஐ.ஜி.சந்திரன் பகிர்ந்து கொண்டார். இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப் பாளர் 
    வெண்மணி, முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் கிருஷ்ணபரதன், செல்வ மூர்த்தி, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன். மாணவர்கள் மற்றும் அபிஷேகபாக்கம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×