என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிப்பு-வையாபுரி மணிகண்டன் புகார்

    புதுவையில் கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளது என வையாபுரிமணிகண்டன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்   கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில மக்கள் கொசுத்தொல்லையால் படும் அவதியை தடுக்காமல் ஆழ்ந்த  உறக்கத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை இருப்பது வேதனையளிக்கிறது. புதுவை மாநிலத்தில் சமீபத்தில் பெய்த திடீர் மழையால்  பல இடங்களில் மழைநீர் தேங்கி குட்டைகளாக மாறியுள்ளன. 

    காலி மனைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து  தேங்கியுள்ளது. இவையனைத்தும் தற்போது கொசு உற்பத்தி கூடங்களாக மாறிவிட்டன. இவற்றுடன் வீணாக தூக்கி வீசப்பட்ட பொருட்கள்,  பிளாஸ்டிக் குவளைகள், இளநீர் கூடுகளும் கொசு உற்பத்திக்கு பக்கபலமாக மாறிவிட்டன.

    மாநிலம் முழுவதும் கொசுவினால் ஏற்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளது. நாள்தோறும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். குழந்தைகள், முதியோர்,  மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, டைபாய்டு போன்ற கொசுவினால் பரவும் நோய்களை ஒழிக்க உடனடியாக மாநிலம் முழுவதும் காலை, மாலை  நேரத்தில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். இந்த நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மருந்துகளை போதியளவு கை யிருப்பில் வைக்க வேண்டும். 

    நோய் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு,  விழிப்புணர்வு நடவடிக் கைகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×