என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா
புதுவையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 329 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, மாகியில் ஒருவர் என 5 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 1, காரைக்காலில் 2 பேர் என 3 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 771 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 796 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 8, காரைக்காலில் 4, மாகியில் ஒருவர் என 13 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 10 ஆயிரத்து 820 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






