என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் வெற்றி பெற்றவர்கள் மாநில தலைவர் பாலாஜியை சந்தித்து வாழ்
கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி. வெற்றி
கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஐ.என்.டி.யூ.சி. வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனியாக கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நகராட்சியில் பணிபுரியும் 300 பேர் உறுப்பினராக உள்ளனர். 2 ஆண்டுக்கு ஒருமுறை கடன் சங்க இயக்குனர் குழு தேர்தல் நடத்தப்பட்டு 9 பேர் தேர்வு செய்யப்படுவர். புதிய இயக்குனர்களுக்கான தேர்தல் நடந்தது.
இதில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமையில் 9 இயக்குனர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இதில் சகாயராஜ், ஆதிமூலம், இளங்கோவன், சீனுவாசன், முனியன், பெருமாள், சீனுவாசன் என 7 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞானசேகரன், தமிழ் செல்வன், முத்துராமன், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






