search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்திய காட்சி.
    X
    கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்திய காட்சி.

    அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு

    மணவெளி தொகுதியில் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    மணவெளி  தொகுதியில் உள்ள அனைத்து அரசுப்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமை ப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் சபா நாயகர் ஏம்பலம் செல்வம்  சட்டசபை கமிட்டி அறையில் ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி  பொறியாளர் பன்னீர்,  இளநிலை பொறியாளர்  கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் துணை முதல்வர், தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டு அவர்களது பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு குறித்த குறைகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த குறைகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.
    Next Story
    ×