என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் இரா.லலிதா
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை தொடங்கியது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை இப்போட்டியில்பங்கேற்க செய்வதன் வாயிலாக மக்களாட்சியின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது.
இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாக் கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகள் வரவேற்க்கப்பட்டு இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 2097 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இப்போட்டியில் கலந்து கொள்ள நிர்ணயிக்கப்பட்ட காலம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வினாடிவினா, வாசகம் எழுதுதல், பாட்டு, காணொலி காட்சி உருவாக்குதல், விளம்பரப்பட வடிவமைப்பு போட்டிகள் என 5 பிரிவுகள்.
விதிமுறைகள், நிபந்தனைகளை தொடர்புடைய வலைதளத்தில் காணலாம்.போட்டி பதிவுகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பங்கேற்பாளர்கள் பெயர் மற்ம் பிரிவு ஆகியவற்றை தெரிளவாக குறிப்பிட வேண்டும். வினாடிவினா போட்டிக்கு வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து 31-ந்தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசாக இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிசு மற்றும் அடையாள வில்லை வழங்கப்படும். பங்கேற் பாளர்கள் அனைவரும் போட்டியின் 3 நிலைகளை நிறைவு செய்ததன் பேரில் மின்னணு சான்றிதழ் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






