என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காத்தாயி
    X
    காத்தாயி

    மூதாட்டி கொலை

    ஆண்டிடம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே முன்னுரான் காடுவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த காத்தாயி அம்மாள்  வயது 75. இவர் அதே கிராமத்தில் உள்ள தனது பேரன் பிரபாகரன் வயது 33 அவரது வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் தினமும் வயலுக்கு சென்று வருவது வழக்கம். 

    நேற்று காலை 11 மணி அளவில் வயலுக்கு சென்ற காத்தாயி அம்மாள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.   இதனால் உறவினர்கள் மற்றும் பேரன் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் தேடிக் கொண்டிருந்தனர். 

    அப்போது  பூவாணி பட்டு ஏரிக்கரை அருகில் வாய்க்காலில்   காத்தாயி அம்மாள் இறந்து  கிடப்பதாக அந்த வழியாக   மோட்டார் சைக்களில் வந்த தம்புசாமி என்பவர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். 

    இதைத் தொடர்ந்து அவர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது  காத்தாயி அம்மாள் காதில் இருந்த தோடு மூக்குத்தி இல்லாமல் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

    அதைப் பார்த்த பேரன் மற்றும் உறவினர்கள்அதிர்ச்சி யடைந்தனர். நகைக்காக மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வருகிறது. 

    மேலும் இது குறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று  காத்தாயி அம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பிரபாகரன் ஆண்டிமடம் போலீசில் புகார் செய்தார்.   அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×