search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பங்குனி உத்திர திருவிழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    X
    பங்குனி உத்திர திருவிழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தவளக்குப்பம் சிவ சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா

    தவளக்குப்பம் சிவசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழாவில் சாபாநாயகர் ஏம்பலம் செல்வம் தேர் வீதி உலாவை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள  சிவசுப்பிரமணிய கோவில் 48-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடந்தது. விழாவில் தொகுதி   எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வீதி உலாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் திருமுருகன், பழனிசாமி, தட்சணாமூர்த்தி, மணிவண்ணன், நடராஜன், ஜெயமூர்த்தி, தினேஷ் கார்த்திக், ரமேஷ், சீனு, சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×