search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

    ரொட்டி- பால் ஊழியர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு

    புதுவையில் ரொட்டி- பால் ஊழியர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறையில் 19 வருடங்களாக பணியாற்றி வரும் ரொட்டி  - பால் ஊழியர்கள் உயர்த்தி வழங்கப்பட்ட சம்பளத்தை இதுநாள் வரை வழங்காத கல்வித்துறையையும், அதற்கு காரணமான அதிகாரிகளையும் கண்டித்து 2 நாட்களாக  உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில்  ரொட்டி- பால் ஊழியர்களுக்கு ஆதரவாக பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பிறகு இயக்குனரை சந்தித்து உடனடியாக இந்த பிரச் சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.
    Next Story
    ×