என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பாலாலய விழா
Byமாலை மலர்16 March 2022 9:22 AM GMT (Updated: 16 March 2022 9:22 AM GMT)
சீர்காழி அருகே கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பாலாலய விழாவில் சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார்.
சீர்காழி:
சீர்காழி அருகிலுள்ள தென்னலக்குடி கிராமத்தில் உள்ள பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்துவிட்டதால் புதிதாக கட்டி குடமுழுக்கு நடத்திட கிராமவாசிகள், பக்தர்கள் ஒன்றிணைந்து முடிவு செய்தனர்.
அதன்படி குடமுழுக்கு நடத்திட பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள், வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பாலஸ் தாபனமும் திருப்பணி தொடக்க விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி தேவஸ்தானம் கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று திருப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
விழாவில் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயளாலர் செந்தில்குமார், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், தொழிலதிபர் ரங்கதுரை, வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்திருந்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X