என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்த காட்சி.
சொகுசு படகு சவாரி
சுற்றுலா பயணிகளுக்காக கடலில் சொகுசு படகு சவாரி தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
வார இறுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் படகு சவாரி செய்தபடி கடற்கரை அழகை ரசிக்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்தது. இதற்காக தனியார் பங்களிப்போடு சொகுசு படகு சேவை இன்று தொடங்கப்பட்டது.
பாதுகாப்பு உபகரணங்க ளோடு 40 பயணிகள் இந்த பயணத்தை மேற் கொண்டனர். இந்த படகில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படகு புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ், நீலம், ரூபி உட்பட பல கடற்கரைகள் வழியாக பயணித்து நல்லவாடு வரை சென்று திரும்பும்.
3 மணி நேரம் படகில் பயணித்து சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை காணலாம். காலை, மாலை என 2 முறை இந்த படகு இயக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு அவசியம். வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த படகு சவாரி வெகுவாக கவரும்.
Next Story






