என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வருகிற 20-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

    வருகிற 20-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட  நிர்வாகம் மற்றும் மாவட்ட  வேலை  வாய்ப்பு மற்றும்  தொழில்நெறி  வழி காட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு   முகாம்  வருகிற 20&ந்தேதி நடக்கிறது.
     
    அரியலூர் மாவட்டம், கீழப்பழூர்  அரசினர்  பாலிடெக்னிக் கல்லூரி வளாகத் தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடை பெற உள்ளது. இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள்   மேலும் திருச்சி, சென்னை,  கோவை,  கரூர், திருப்பூர்  மற்றும்  ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறும் மனுதாரர்களது வேலை வாய்ப்பு பதிவுகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.  18  வயது  முதல் 35  வயது  வரையிலான 8&ஆம்   வகுப்பு   தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல்,  ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 

    மேலும், இளைஞர்கள் வேலை  வாய்ப்பு  பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர் பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவ தற்கும்,  அயல்நாட்டு வேலை  வாய்ப்பு  பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு   வேலை வாய்ப்பு  நிறுவனம் மூலம் 

    ஆலோசனைகள் வழங்குவ தற்கும் வேலை  வாய்ப்பு தொடர்பான  உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலை   வாய்ப்பு மற்றும் தொழில்  நெறி  வழிகாட்டல் மையத்திற்கும்    தனித்தனி அரங்குகள்   அமைக்கப்பட வுள்ளது. 

    எனவே இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில் தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பங்கேற்று பயனடையுமாறு    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×