என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி லெட்சுமி (வயது 65), மகன் கலைவாணன்(44). லெட்சுமி அதே ஊரில் உள்ள அவரது மற்றொரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 18- ந் தேதி அவர் இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி, அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அவரது தாய் லெட்சுமி இறந்ததாக தெரியவந்த நாளுக்கு, முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல், அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, சந்தேகிக்கும் வகையில் அவரது நெருங்கிய உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகி இருந்தது.
இதனால் தனது தாயின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலைவாணன் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதனுடன், கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொடுத்திருந்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவிட்டதன் பேரில், குன்னம் போலீசார் முதற்கட்டமாக லெட்சுமியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில், அரசு டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், அடக்கம் செய்யப்பட்டிருந்த லெட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர்.
மேலும் லெட்சுமியின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளவர்களை, சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி லெட்சுமி (வயது 65), மகன் கலைவாணன்(44). லெட்சுமி அதே ஊரில் உள்ள அவரது மற்றொரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 18- ந் தேதி அவர் இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி, அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அவரது தாய் லெட்சுமி இறந்ததாக தெரியவந்த நாளுக்கு, முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல், அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, சந்தேகிக்கும் வகையில் அவரது நெருங்கிய உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகி இருந்தது.
இதனால் தனது தாயின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலைவாணன் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதனுடன், கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொடுத்திருந்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவிட்டதன் பேரில், குன்னம் போலீசார் முதற்கட்டமாக லெட்சுமியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில், அரசு டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், அடக்கம் செய்யப்பட்டிருந்த லெட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர்.
மேலும் லெட்சுமியின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளவர்களை, சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






