என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்த கொக்குகளில் சில.
ஏரியில் இறந்துகிடந்த கொக்குகள்
அரியலூர் அருகே ஏரியில் கொக்குகள் இறந்து கிடந்தன.
அரியலூர்:
அரியலூர் அடுத்த வெங்கடரணபுரம் கிராமத்தில் உள்ள அய்யனார் ஏரி சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். நடப்பாண்டு அதிகளவு மழை பெய்ததால், ஏரி முழுவதுமாக நீர் நிரம்பியது. தற்போது சுமார் 60 சதவீத தண்ணீர் உள்ளது.
இங்கு பல்வேறு வகையான பறவைகள் இரைத்தேடி வருகின்றன. சில பறவைகள் இரவில் அங்கேயே தங்கியும் விடுகின்றன. இந்நிலையில், நேற்று ஏரி தண்ணீரில் 17 கொக்குகள், நாரைகள் இறந்து கிடந்துள்ளன. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனசரக அலுவலர் பழனிவேல் தலைமையிலான அலுவலர்கள், இறந்து கிடந்த 17 கொக்குகளை கைப்பற்றி, ஓட்டகோவில், கால்நடை மருத்துவ கிளை அலுவலகத்துக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தண்ணீர் குறைந்து வருவதால், மீன் பிடிக்க யாரேனும் ஏரியில் மருந்து போட்டனரா? அல்லது தண்ணீரின் தன்மை மாறிவிட்டாதா? என பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதே நேரத்தில், ஏரியில் உள்ள தண்ணீரை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






