என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் ஆண்டி மடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி.  இவரது மகன் கோகுல்ராஜ் வயது 22. இவர் பி.எஸ்.சி படித்து வருகிறார். 

    இவர் அதே பகுதியை சேர்ந்த பி.காம் படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து அந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி சிறுமியை கடத்திச்சென்று சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். 

    பின்னர் கோகுல்ராஜ் அங்கிருந்து சிறுமியை சண்டிகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை செய்தார்.  

    பின்னர் இது குறித்து ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சண்டிகரில் இருந்த கோகுல்ராஜை போனில் தொடர்பு கொண்டு இருவரும் வரவழைக்கப்பட்டனர். 

    பின்னர் அவர்கள் கடந்த 8-ந் தேதி சொந்த ஊரான சிலம்பூருக்கு வந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தில் கோகுல்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×