என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
நிதியுதவி பெற விவசாயிகள் ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டும்
பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண் விபரங்களை சரிபார்க்க வேண்டும்.
அரியலூர்:
பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற்று வரும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை வரும் 31&ந் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாரதப் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, 11&வது தவணை தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் விபரங்களை சரிபார்த்தல் அவசியம். பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை வரும் 31&ந் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 4 ஆயிரத்து 55 விவசாயிகள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது."
Next Story






