என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை கடற்கரையில் நடைபயிற்சி சென்ற சுற்றுலா பயணிகள்
கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு குவிந்த மக்கள்
கொரோனா பரவல் குறைந்ததால் புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு மக்கள் குவிந்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் தற்போது மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர்.கடற்கரை சாலை, பூங்காக்கள் மூடப்பட்டதால் தினசரி நடைபயிற்சியாளர்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர்.
திறந்த வெளியில் தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடப்பதில் உள்ள திருப்தி இல்லை என்றாலும் நோய் ஆபத்து கருதி முடங்கி இருந்தனர். தற்போது புதுவையில் கொரோனா தொற்று குறைந்து பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகி விட்டது.
இதனால் பொதுமக்கள் பயமின்றி கடற்கரை சாலையில் அதிக அளவில் நடை பயிற்சிக்கு குவிந்தனர். 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதுவை கடற்கரை சாலையில் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்தபடியே நடைபயிற்சி மேற்கொள்ள வார இறுதி நாளான இன்று வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்தனர்.
இதனால் புதுவை கடற்கரை சாலையில் அதிகாலை யிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதே போல் சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டம் அதிகமாகியுள்ளது. சுற்றுலா நகரமான புதுவை மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
Next Story






