என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பெரம்பலூர்:
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் முதலாம் வகுப்பு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
பெரம்பலூர் விளாமுத்தூர் சாலையில் இயங்கி வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் கடந்த 28-ந் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 21-ந் தேதியாகும். 6 வயது முடிந்த இருபாலரும் முதலாம் வகுப்பில் சேர தகுதியுடையவர்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் கேந்திரியா வித்யாலயா பள்ளியின் இணையதளங்களை பார்வை யிட்டு பயன்பெறலாம். பள்ளி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் 25-ந் தேதி சேர்க்கைக்கு தகுதியுடைவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப் படும், எனவே பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் தெரிவித்துள்ளார்.
Next Story






