என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 75 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதை கண்டித்து தி.மு.க. கட்சியின் தொழிற்சங்கமான தொ.மு.ச. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிப கழக, துணை மண்டல மேலாளரை கண்டித்து அவருடைய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40, 45 வாங்குவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொன்டனர். இதனையடுத்து போராட்டத்தை விடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகள் உறுதி அளித்தபடி நெல் மூட்டைகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Next Story






