என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறிச்சி கிராமத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்து ஆலோசனை
திருப்பனந்தாள் அருகே வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நீர்நிலவள திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிச்சி மாதிரி கிராமத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கிராமத்தில் விவசாயிகளுடன் தமிழ்நாடு நீர் நில வள மேம்பாட்டு முகமை மாநில அதிகாரிகள் முனைவர் கிருஷ்ணன் நீர் ஆதார நிபுணர் ஷாஜகான் வேளாண் ஆலோசகர் அருள்குமார் செயற்பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் நோக்கம், , மாதிரி கிராமத்தின் செயல்பாடுகள், நீரின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்மாதிரி கிராமத்தில் நமது கனவு கிராமத்திட்டம், நீர் நிலைகள் பற்றிய விழிப்புணர்வு, நீர் வரவு செலவு கணக்கின் அவசியம், மதிப்பு கூட்டிய வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்துதல்கான திட்ட வரையரைகள் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
இதில் அனைத்து முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குநர் (பொ) கார்த்திகேயன் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ், ராம்குமார், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






