என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகர்மன்ற உறுப்பினர் ஆய்வு
    X
    நகர்மன்ற உறுப்பினர் ஆய்வு

    நகர்மன்ற உறுப்பினர் ஆய்வு

    சீர்காழி பகுதி ரேசன் கடையில் நகர்மன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    சீர்காழி பிடாரிவடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தாடாளன் கீழமடவிளாகம் பகுதியில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேசன் கடையில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்திபாபு ஆய்வு செய்தார். தரமான அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார். 

    மேலும் இந்த ரேசன் கடை 14வது வார்டு பகுதி மக்களுக்கு நீண்ட தூரத்தில் உள்ளதால் பிடாரி வடக்கு வீதியில் ஏதேனும் ஒரு பகுதிக்கு கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து ரேசன் கடையை விற்பனையாளரிடம் ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×