என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பெரம்பலூரில் 13ந்தேதி மாவட்ட சதுரங்க போட்டி

    பெரம்பலூரில் வருகிற 13ந்தேதி மாவட்ட சதுரங்க போட்டி நடைபெறுகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 13ந்தேதி காலை 8மணியளவில் நடைபெறுகிறது.

    இதில் 11, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் ஆண்,பெண் இருபாலருக்கும் நடைபெறு கிறது. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப் பெறு வோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்து கொள்ளலாம்  என மாவட்ட தலைவர்  சரவணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×