என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTOS
    X
    FILE PHOTOS

    தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

    செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    வடபழனி என்றழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டி­குளம் தண்­டாயுதபாணி சுவாமி  கோவில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக  நடைபெ­றுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு​   பங்குனி உத்திர திருவிழா  இன்று காலை கொடியேற்­றத்துடன் தொடங்கியது.​ ​

    கொடியேற்றத்தை முன்னிட்டு கா­லையில் மலையில் முருக­னுக்கு சிறப்பு அபிஷே­க, ஆராதனைகள் நடைபெற்­றது.  பின்னர் கொடி கம்பத்திற்கு சிறப்பு யாகம் அபிஷேகம், ஆராதனை­கள் நடத்தப்பட்டு, பக்தர்களின் அரோகரா,    அரோகரா கோஷங்கள் முழங்க மலையில் கொடியேற்றம்  நடைபெற்றது.

    கொடி­யேற்றத்தில் ஊராளிக் கவுண்டர்​ முன்னேற்ற சங்க மாநில தலைவர் கணேசன், துணை தலைவர் சுப்ரமணி­யன்,  ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதியழகன் உள்ளிட்­ட​ செட்டிக்குளம்,​  ஆலத்தூர்  கேட், இரூர்,   சத்திரமனை  உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்­களைச்  சேர்ந்த  பக்தர்­கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முதல் தினந் தோறும் தண்டாயுத­பாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் இரவு அலங்கார வாகனத்தில் சு­வாமி திருவீதியுலாவும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 18-&ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெ­றுகிறது.
    Next Story
    ×