search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

    பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம்-அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இக்கோவிலில் மகோற் சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சாமி வீதி உலா நடந்து வந்தது.

    கடந்த  8-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் ரணகளிப்பும், அதனை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அம்மனை அலங்கரித்து தேரில் அமர்த்தி தேரோட்டம் நடந்தது. 

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேரினை இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று  கோவிலை வந்தடைந்தது.  இரவு மயான கொள்ளை நடந்தது. பின்னர் வீதி உலா நடைபெற்றது.  

    விழாவில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அனிபால் கென்னடி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, அ.தி.மு.க. மாநில துணைச்செயலாளர் குமுதன் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி  தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா,  துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்த லிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×