என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு படையில் மகளிர் தின விழா கொண்டாடிய காட்சி.
அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மகளிர் தின விழா
அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மகளிர் தின விழா நடைபெற்றது.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டப்பட்டது. டிஐஜி சாந்திஜெய்தேவ் தலைமையில் கேக் வெட்டியும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் துணை கமாண்டன்ட் பராமிந்தர் கவுர், அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் சேத்னா, சீனியர் மருத்துவ அதிகாரி துணை கமாண்டன்ட் எஸ்.கே. சபானா, அரக்கோணம் துணை தாசில்தார் சரஸ்வதி, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மலர்விழி மற்றும் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






