search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இலவச சேலை, தையல் எந்திரம், குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இலவச சேலை, தையல் எந்திரம், குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய போது எடுத்த படம்.

    பெண்களுக்கு பாதுகாப்பாக அ.தி.மு.க.வினர் திகழ வேண்டும்-அன்பழகன் பேச்சு

    பெண்களுக்கு பாதுகாப்பாக அ.தி.மு.க.வினர் திகழ வேண்டும் என்று கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில்  உப்பளம் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது.

    மாநில மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி இலவச சேலை, தையல் எந்திரம்,  குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி பேசியதாவது:-

    ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் கருவறையில் இருந்து வாழ்நாள் முழுவதும் பெண்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட   உதவிகள் மூலம்   பெண்ணினத்தை பாதுகாத்தவர். 

    ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆட்சியை வழிநடத்திய முன்னாள் முதல்-அமைச்சர்கள்  எடப்பாடி  பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர்  ஜெயலலிதாவின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்தினர். 

    கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கும், பணிக்கு செல்லும் பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனத்தை  வழங்கினார்கள். அரசு பணியில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்கிய பெருமை அ.தி.மு.க. ஆட்சியையே சாரும்.

    மறைந்த  தலைவர்கள் வழியிலும், தற்போது அ.தி.மு.க.வை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களின் எண்ணப்படியும், பெண் களுக்கு பாதுகாப்பாக என்றென்றும் நாம் திகழ வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.


    இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் ராஜாராமன், மாநில இணை   செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், அன்பானந்தம் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் அன்பழக உடையார், காந்தி, சேரன்  மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டு ரங்கன்.
    மாநில அண்ணா தொழிற்சங்க   பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்,  ஜெ. பேரவை முன்னாள் துணை செயலாளர்  சித்தானந்தம், மாநில மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, மாநில மகளிர் அணி துணை தலைவிகள் செல்வராணி, மாலதி, இணை செயலாளர்கள் மச்சகந்தி, தேன்மொழி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் பவானி, சாரந்தா,  அஜீத்தா பார்வதி, ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, சித்ரா, மாநில பொருளாளர் செந்திலரசி, செயற்குழு உறுப்பினர் இந்திரா முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வீரம்மாள்,  கமலா, சூர்யா மற்றும் வனஜா, கலைச்செல்வி, உமா, சிவகங்கை, சங்கரி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×