என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கிய காட்சி.
    X
    விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கிய காட்சி.

    நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளை பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் - கலெக்டர்

    நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளை பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:



    தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் ரமணசரஸ்வதி பேசிய போது, இந்தியாவிலேயே நுகர்வோர் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    நுகர்வோர் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால் மட்டும் போதாது, அதனுடைய தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் அதனுடைய தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருள்கள் அனைத்திற்கும் ரசீது பெறப்படவேண்டும்.

    உணவுப் பொருள்களில் ஏதேனும் கலப்படம் மற்றும் குறைகள் இருந்தால் அது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் அளிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை உணவுப்பொருள்கள் உள்ளிட்ட நுகர்வோரின் புகார் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக சம்மந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களும் விழிப்புணர்வு அடைய முடியும்.

    நுகர்வோர் பாதுகாப்பிற்கான உரிமை, தகவல்பெறும் உரிமை, விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் உரிமை, பிரதிநிதித்துவத்திற்கான உரிமை, குறை தீர்க்கப்படுவதற்கான உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை

    உரிமைகளும், விழிப்புணர்வோடு இருத்தல், ஈடுபாட்டுடன் இருத்தல், தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்த்தல், தவறுசெய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் பற்றி புகார் செய்தல், பொருள்களையும் சேவைகளையும் முறையாகப் பயன்படுத்தல், சுற்றுச்சூழல் குறித்து பொறுப்புணர்ச்சி கூட்டு முயற்சி உள்ளிட்ட கடமைகள் குறித்தும் விளக்கமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

    பின்னர்விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் ஊக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
    Next Story
    ×