என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா
புதுவையில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 454 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 2 பேருக்கும், காரைக்காலில் ஒருவரு க்கும்தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளில் 2பேர் அரசு மார்பக நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர்களில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை.
தற்போது மருத்துவ மனைகளில் 3 பேரும், வீட்டு தனிமையில் 36 பேரும் என ஒட்டு மொத்தமாக 39 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 744 பேர் குணமடைந் துள்ளனர், ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இத்தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






