என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்தரங்கில் அமைச்சர் நமச்சிவாயம் பேசிய காட்சி.
    X
    கருத்தரங்கில் அமைச்சர் நமச்சிவாயம் பேசிய காட்சி.

    சிறு, குறு தொழில் தொடங்க முன்னுரிமை-நமச்சிவாயம் அறிவிப்பு

    சேதராப்பட்டில் கையகப்படுத்திய நிலத்தில் சிறு, குறு தொழில் தொடங்க முன்னுரிமை கொடுப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
    புதுச்சேரி:

    இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) புதுவை கவுன்சிலின் ஆண்டுக் கூட்டம் மற்றும் புதிய உலகிற்கு ஏற்ப புதுவையைக் கட்டமைத்தல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

    சுற்றுலாத் துறையில் எதிர் பார்ப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்க முதல் அமர்வில் சி.ஐ.ஐ. புதுவை கவுன்சில் முன்னாள் தலைவர் அமர்நாத் வரவேற்றார்

    கருத்தரங்கில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து,  சேதராப்பட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 750 ஏக்கர் நிலத்தை பிப்டிக் வழியாக பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளோம்.   அந்த அனுமதி கிடைத்தவுடன் பார்மா கம்பெனிகள், ஐ.டி. நிறுவனங்கள், சிறு,குறு தொழில்கள் முதலானவைகளுக்கு இடங்கள் கொடுக்க விரும்புகிறோம்.  

    சி.ஐ.ஐ.யுடன் சேர்ந்து புதுவைக்கான புதிய தொழிற் கொள்கையை உருவாக்கவும் விரும்புகிறோம்.  அரசு புதுவையில் தொழில்கள் சிறக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தரும். 
      
    ஒற்றைச்சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும் அனுமதிகளை  எளிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கக் இருக்கிறோம்.  

    திறன் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எங்கள் அரசு ஆதரிக்கும். 2017-ம் ஆண்டு முதல் புதுவை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகை தொகை ரூ.25 கோடியில் தற்போது ரூ.10 கோடி நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். 

    நிதித்துறை ஒப்புதல் கிடைத்தவுடன்  அந்த பணம் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்து விடும். மிதி தொகையை வரும் பட்ஜெட்டில் அறிவித்து வழங்க உள்ளோம்.  சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.  

    அதே போல அனைத்து தொழிற்பேட்டைகளிலும் வசதிகளை மேம்படுத்துவோம். 
     
    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.
    Next Story
    ×