என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதையில் தனி நபர்கள் தோண்டிய பள்ளத்தை மூடிய போலீசார்
    X
    பாதையில் தனி நபர்கள் தோண்டிய பள்ளத்தை மூடிய போலீசார்

    சின்னசேலம் அருகே பாதையில் தனி நபர்கள் தோண்டிய பள்ளத்தை மூடிய போலீசார்

    சின்னசேலம் அருகே பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டுள்ளதை பொக்லைன் எந்திரத்தை கொண்டு மூடினர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர்பூசப்பாடி சாலையில் பெரியார் நகர் காட்டுக்கொட்டாய் கிழக்கு பாதையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் தனிப்பட்ட முன் விரோதத்தை கொண்டு 5 இடங்களில் சாலையின் குறுக்கே யாரும் செல்ல முடியாது வகையில் தடுத்து பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.

    இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மேல்நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆசிரியர் உள்ளிட்ட 28 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    காலம் காலமாக அனுபவித்து வந்த பாதையில் சிலர் உள்நோக்கம் கொண்டு பாதையின் குறுக்கே குழிதோண்டி துண்டித்து நடக்கவிடாமல், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத வகையில் தடுத்துள்ளதால், சுமார்150 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகள் . மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற வருவோர், கால்நடை வளர்ப்போர், விளைபொருட்களை அறுவடை செய்து வெளியில் கொண்டு செல்வோர் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

    இந்த சம்பவம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆகவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், தேவ மூர்த்தி மற்றும் மகளிர் போலீசார், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அப்பகுதி மக்களிடம் சட்டம் ஒழுங்கு பற்றி பேச்சுவார்த்தை செய்து பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டுள்ளதை பொக்லைன் எந்திரத்தை கொண்டு மூடினர்.
    Next Story
    ×