என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பதவிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது

    அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பதவிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 7 சுயேட்சை 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. 

    நகராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக சாந்தி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளராக ஜீவா செந்தில் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சாந்தி கலைவாணன் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை மாநில பிற்படுத்தப்பட்டோர் நத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைவர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். 

    தொடர்ந்து போதிய உறுப்பினர்கள் வராததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.  ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க 10, அ.தி.மு.க., பா.ம.க. தலா 4, வி.சி.க. 2, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் நகராட்சி தலைவராக சுமதி சிவக்குமார் (வி.சி.க.) துணைத்தலைவராக கருணாநிதி (தி.மு.க.) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

    இதே போல உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவராக மலர்விழி (தி.மு.க.) துணைத்தலைவராக அக்பர் அலி (காங்கிரஸ்) வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவராக மார்கிரேட் அல்போன்ஸ் (தி.மு.க.) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
    Next Story
    ×