என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்க அமைச்சர் தலைமையில் குழு- ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

    உக்ரைனில் தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்ப வேண்டும் என்று ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் நாட்டுக்கு படிக்க சென்ற பல ஆயிரம் மாணவர்களில் சிலர் இந்தியா திரும்பியுள்ளனர். விமானங்களுக்காக போலந்து,   ருமேனியா,  ஹங்கேரி, மால்டா நாடுகளில் காத்திருக்கின்றனர். உக்ரைன் அதிகாரிகள் வெளியேறும் இந்தியர்களுக்கு உதவ மறுக்கின்றனர். 

    ரெயிலில்  ஏறவும் அனுமதிப்பதில்லை. கடும் குளிரில் உணவு, தண்ணீர் இன்றி உயிரை  கையில் பிடித்து தவித்து வருகின்றனர். மத்திய அரசு  காலத்தோடு செயல்பட்டிருந்தால் இந்திய மக்களை காப்பாற்றி அழைத்து வந்திருக்கலாம். 

    எனவே, தமிழகத்தை பின்பற்றி அமைச்சர், எம்.பி., ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் குழுவை அனுப்பி புதுவை மாணவர்களை மீட்டுவர அரசு முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

    கோப்பு படம் உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்க 
    அமைச்சர் தலைமையில் குழு- ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தல்


    உக்ரைனில் தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க 
    அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்ப வேண்டும் என்று ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:
    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உக்ரைன் நாட்டுக்கு படிக்க சென்ற பல ஆயிரம் மாணவர்களில் சிலர் இந்தியா திரும்பியுள்ளனர். விமானங்களுக்காக போலந்து,   ருமேனியா,  ஹங்கேரி, மால்டா நாடுகளில் காத்திருக்கின்றனர். உக்ரைன் அதிகாரிகள் வெளியேறும் இந்தியர்களுக்கு உதவ மறுக்கின்றனர். 

    ரெயிலில்  ஏறவும் அனுமதிப்பதில்லை. கடும் குளிரில் உணவு, தண்ணீர் இன்றி உயிரை  கையில் பிடித்து தவித்து வருகின்றனர். மத்திய அரசு  காலத்தோடு செயல்பட்டிருந்தால் இந்திய மக்களை காப்பாற்றி அழைத்து வந்திருக்கலாம். 

    எனவே, தமிழகத்தை பின்பற்றி அமைச்சர், எம்.பி., ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் குழுவை அனுப்பி புதுவை மாணவர்களை மீட்டுவர அரசு முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்/
    Next Story
    ×