என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய காட்சி.
எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டம்
வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் சாரம் அவ்வை திடல் அருகே உள்ள எல்.ஐ.சி. கிளை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் சாரம் அவ்வை திடல் அருகே உள்ள எல்.ஐ.சி. கிளை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு துணைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயஸ்ரீ வரவேற்றார். துணை பொருளாளர் ஜானகிராமன் அறிமுக உரையாற்றினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி லிங்கம் எம்.பி., எதிர்க் கட்சித்தலைவர் சிவா, மார்க்சிஸ்டு செயலா ளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், கோட்ட பொருளாளர் தாண்டவகிருஷ்ணன், கோட்ட தலைவர் அன்பரசி ஜூலியட், மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இணை செயலாளர் வைத்திலிங்கம் நன்றி கூறினார். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கண்டித்து இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
Next Story






