என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளியம்மாள்
நாட்டறம்பள்ளி அருகே மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்டார்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம் ஏழுமலையான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35) எலக்ட்ரீசியன்.
இவருக்கும் மதுரை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (26) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவகளது மகள்கள் சமந்தா (5) மற்றும் முத்தரிசி (2).
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது வள்ளியம்மாள் தன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தனது கணவரிடம் கேட்டுயுள்ளார்.
இதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அன்று இரவு வள்ளியம்மன் மற்றும் அவரது மகள் முத்தரசி இருவரும் ஒரு அறையிலும் அன்பழகன் மற்றும் மற்றொரு மகள் சமந்தா மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வள்ளியம்மாள் வீட்டு வாசலில் தெளிக்கும் சாணி பசுடரை இவரது இளைய மகள் முத்தரசிக்கு கொடுத்து குடிக்க வைத்து உள்ளார். அதன் பிறகு தானும் கலந்து குடித்தார்.
இதனால் இருவரும் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்தனர். பின்னர் அன்பழகன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் வள்ளியம்மாள் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் முத்தரசி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






