என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
பாகூரில் கணவன் - மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த போதை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் தேச மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயமணி (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.தற்போது இவர் மனைவியுடன் குடியிருப்பு பாளையம் மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்ப அதே பகுதியை சேர்ந்த அப்பு என்ற அர்ப்புதன், சவுந்தர், கோபால் மற்றும் பரதன் ஆகியோர் குடிபோதையில் ஆபாசமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை உதயமணி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை கும்பல் உதயமணியை தகாதவார்த்தைகளால் திட்டி கையாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கினர்.
இதனை உதயமணியின் மனைவி தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது. மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த கணவன்- மனைவி இருவரும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து உதயமணி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போதை கும்பலை தேடி வருகிறார்கள்.
Next Story






