search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
    X
    கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

    தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான குமரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14 திமுக கவுன்சிலர்கள், 5 அதிமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் மற்றும் அமமுக தலா ஒரு கவுன்சிலர்கள் ஆக மொத்தம் இருபத்தி ஒரு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் 14 திமுக கவுன்சிலர்கள், ஒரு தேமுதிக கவுன்சிலர் ஆக மொத்தம் 15 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
    Next Story
    ×