என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயானக்கொள்ளை விழா
ராணிப்பேட்டையில் மயான கொள்ளை திருவிழா
ராணிப்பேட்டையில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை பாலாற்றில் வருடம்தோறும் மாசி மாதம் அமாவாசை அன்று நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
விழாவையொட்டி பக்தர்கள் பாலாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை காரை, அம்மன் கோயில் தெரு, பழைய அஞ்சலக வீதி, பிஞ்சி, முக்கியம்மன் கோவில் பகுதி உட்பட பல பகுதியில் அம்மன் கோயில்களில் இருந்து கொடி மரங்கள் பாலாற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பூஜை செய்து கொடியேற்றப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை மயான கொள்ளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு பாலாற்றங்கரை வந்தடைந்தது. பல இளைஞர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலாற்றில் கூடி அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மேற்பார்வையில் டிஎஸ்பி பிரபு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






