என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மருத்துவ காப்பீடு திட்டம் செயல் இழந்ததால் நோயாளிகள் பாதிப்பு- வைத்திலிங்கம் எம்.பி.புகார்
வைத்திலிங்கம் எம்.பி. புகார் மருத்துவ காப்பீடு திட்டம் செயல் இழந்ததால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தி லிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
புதுச்சேரி :
புதுவை வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சுகாதாரத்துறை வழங்குகிற காப்பீடு அட்டையை எந்த தனியார் மருத்துவ மனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. புதுவை மாநிலத்தில் மட்டுமின்றி, அண்டை மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோயாளிகளுக்கு வேண்டிய உதவியை யாரிடம் பெற்றுக் கொள்வது என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நோயாளிகளுக்கு வழிகாட்டுவதற்கு துறையை சார்ந்தவர்களும் தயாராக இல்லை. அதிகாரிகளுக்கும் கூட எந்த மருத்துவமனைக்கு சென்றால் பலன்களை பெற முடியும் என்ற விபரம் தெரியவில்லை.
புதுவையை சேர்ந்தவர்கள் அண்டை மாநிலத்திற்கு செல்லும் போது அங்கு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எங்கு செல்வது என்றும் வழிகாட்டப்படவில்லை. காரைக்காலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லை.
எனவே இந்த மருத்துவ திட்டம் முழுமையாக செயல் இழந்து இருக்கிறது. மக்களுக்கு எந்த விதமான பயனும் இல்லாமல் உள்ளது. அரசு மவுனமாக இருந்து ஏழை நோயாளிகள் பாதிப்பை கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
உடனடியாக கவர்னரும், முதல்-அமைச்சரும் தலையிட்டு ஏழை நோயாளி களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






