என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பனப்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை கலெக்டர் ஆய்வு
பனப்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
நெமிலி:
காவேரிப்பாக்கம் யூனியன் சிறுவளையம் பஞ்சாயதத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் உள்ள நிலத்தின் வழியாக செல்லும் பாட்டை புறம்போக்கு மற்றும் ஏரி, கால்வாய் புறம்போக்கு நிலங்களை அதே பகுதியை சேர்ந்த சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தலைமை செயலாளர் இறையன்புக்கு புகார் சென்றுள்ளது.
இதனையடுத்து புகாரின் உண்மைத் தன்மையை ஆராய ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று லட்சுமிபுரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர் யாராவது ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது சர்வேயரை கொண்டு அளவீடு செய்து உடனடியாக தனக்கு அறிக்கை அளிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது டிஆர்ஓ முகம்மது அஸ்லம், நெமிலி தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story






