என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆற்காடு சுற்றியுள்ள 7 சிவன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
மகா சிவராத்திரியையொட்டி ஆற்காடு சுற்றியுள்ள 7 சிவன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகரை சுற்றி அத்தி (ஆர்) மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் ஆர்க்காடு (அத்தி + காடு) என்னும் பெயரினைப் பெற்று பின்னர் ஆற்காடு என அழைக்கப்பட்டதாக வர லாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வூரினைச்சுற்றி ‘ஷடாரண்யம்‘ எனப்படும் ஆறு வனங்கள் இருந்தன. என்றும், அருகிலுள்ள காஞ்சி மாநகரில் பங்குனி உத்திரத்தின் போது நடந்த ஏகாம்பர நாதர் ஏலவார் குழலி யம்மை திருமணக் கோலத்தை காண வந்த முனிவர்களும், ஆறு ஆளுக்கொருவராக இவ் வனங்களில் தங்கி அருந் தவம் புரிந்ததாகவும், அவர்கள் ஈசனை லிங்க வடிவில் செய்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.
இதனால் Ôஆறு காடுகள் ‘என்னும் பொருள் ஆற்காடு என்னும் பெயர் உண்டாயிற்று. ஆற்காட்டின் தென்கரையில் இப்போது புதுப்பாடி என்றழைக்கப்படும் ஊரில் சூத வனமும். (மாமரம்), வேப்பூர் என்னும் ஊரில் நிம்பவனமும் (வேப்பமரம்), மேல்வி ஷாரத்தில் விஷ விருட்ச வனமும் (எட்டிமரம்), ஆற்காடு பாலாற்றின் வடகரையில் நவ்லாக் என்னுமிடத்தில் ஒன்பது வகை மரங்கள் ஒருங்கே யான வனமும், வன்னி வேடு என்ற இடத்தில் சமீ வனமும் (வன்னி மரம்) அந்த நாட்களில் இருந்ததாகவும் கூறப்ப டுகிறது.
பாலாற்றில் பரத்வாஜர், வசிஸ்டர், வால் மீகி, காசியப்பர், அத்திரி, அகத்தியர் ஆகிய ஆறு முனிவர்களும் அமர்ந்து சிவபெருமானை பூஜித்து தவம் புரிந்தார்கள் என் றும் புராணங்கள் கூறுகிறது.
அவர்கள் பூஜித்த லிங்கத்தை சுற்றி பின்னர் அழகிய திருக்கோவில்கள் கட்டப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், விழாக்க ளும் நடந்து வருகிறது. ஆற்காட்டை சுற்றியுள்ள ஆறு வனங்களிலும் கோவில் கொண்டுள்ள இறைவனை, அழகிய சிவலிங்க வடிவில் தரி சிப்பது மட்டற்ற மகிழ்ச் சியை ஏற்படுத்துவதாகும்.
ஆற்காடு பாலாற்றின் தென் கரையில் வேப்பூரில் ஸ்ரீவசிஷ்டே ஸ்வரர் கோவில், மேல் விஷாரத்தில் ஸ்ரீ வால்மீ கீஸ்வரர் கோவில், புதுப்பாடியில் ஸ்ரீ பரத் வாஜ் ஈஸ்வரர் கோவில், பாலாற்றின் வடகரையில் குடிமல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அத்திரி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இதுதவிர, வன்னி வேடு கிராமத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், அவரக்கரையில் ஸ்ரீ காசிஈஸ்வரர் திருக்கோயில்களோடு, அவரைக்கரை செல்லும் வழியில் உள்ள காரை கிராமத்தில் ஸ்ரீ கவுதம ஈஸ்வரர் கோவில், தென் பாலாற்றங்கரை சன்னி யாசி மடத்தில் உள்ள ஸ்ரீ அருணாச்சலேசுவரர் கோவில் ஆகியவற்றை சிவராத்திரி தினமான இன்று (1&ந் தேதி) செவ் வாய்க்கிழமை ஒருங்கே தரிசித்தால் கைலாயம் சென்ற பலனைப் பெற லாம் என்பது நம்பிக்கை.
இதனால் இந்த சிவன் கோவில்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று இரவு முழுவதும் இந்த கோவில்களில் பூஜைகள் நடக்கிறது. 7 கோவில்களில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






