என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் படுகாயம்

    உறவினர் பெண்ணுடன் மோட்டார் சைக்கிள் வந்த போது கார் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் அல்லிகொண்ட பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது24). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான டெல்சி(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார்.

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்தவழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ஸ்டீபன்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஸ்டீபன்ராஜ் படுகாயமடைந்தார். டெல்சி லேசான காயமடைந்தார்.

    உடனே ஸ்டீபன்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்டீபன்ராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×