என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு
பிரபல நிறுவனம் பெயரில் விற்பனை செய்த ரூ.1 லட்சம் போலி டீ தூள்- துணி பவுடர் பறிமுதல் - 3 பேர் மீது வழக்கு
பிரபல நிறுவனம் பெயரில் விற்பனை செய்த ரூ.1 லட்சம் போலி டீ தூள்- துணி பவுடரை பறிமுதல் செய்த போலீசார் 3 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பெரிய மார்க் கெட், ரங்கப்பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதியில் செயல்படும் 3 கடைகளில் பிரபல நிறுவனம் பெயரில் போலி டீ தூள் மற்றும் துணி பவுடர் விற்பனை செய்யப்படுவதாக அந் நிறுவன சட்ட ஆலோசகர் நயன்தாரா டெமிக்கு புகார் வந்தது.
இதையடுத்து நயன்தாரா டெமி மற்றும் அவரது குழுவினர் சம்பந்தப்பட்ட கடைகளில் அந்த பொருட்களை விலைக்கு வாங்கி பார்த்தனர்.
அப்போது அந்த 3 கடைகளில் தங்களது நிறுவனம் பெயரில் போலி டீ தூள் மற்றும் துணி பவுடர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நயன்தாரா டெமி இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த 3 கடைகளிலும் சோதனை நடத்தி ரூ.1 லட்சத்துக்கும் மேலான போலி டீ தூள் மற்றும் துணி பவுடரை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடை உரிமையாளர்களான மாணிக்கம், ஜாபர் அலி மற்றும் விற்பனையாளர் பாலமுருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






