என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரி மாநிலத்தில் 10 பேருக்கு கொரோனா

    புதுவை மாநிலத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 26-ந் தேதி 1302 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 10 பேருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 5 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும் மாகியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. ஏனாமில் தொற்று பாதித்தவர் யாரும் இல்லை.

    தற்போது அரசு மார்பக மருத்துவமனையில் 4 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 5 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ஜிப்மர் மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. மருத்துவ மனைகளில் 13 பேரும், வீட்டு தனிமையில் 129 பேர் என மொத்தம் 142 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சதது 63 ஆயிரத்து 707 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×