என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் வியாபாரி மீது தாக்குதல்

    தள்ளு வண்டியில் காய்கறி விற்க எதிர்ப்பு தெரிவித்ததை தட்டிக்கேட்ட பெண் வியாபாரி தாக்கப்பட்டார்.
    புதுச்சேரி:


    திருக்கனூர் அருகே முற்றாம்பட்டு  விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பூமாதேவி (வயது 43).

    இவர், முத்தியால் பேட்டை பகுதியில் தினமும் ஒரு இடத்தில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். 

    இவர் கருவடிக் குப்பம் ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகே தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்தார். அதற்கு கோவில் அர்ச்சகரான வைத்திகுப்பம் பிள்ளையார்   கோவில் தெருவை சேர்ந்த விஜய  வெங்கடேசன் (58) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை பூமாதேவி தட்டிக்கேட்ட போது அவரை விஜய வெங்கடேசன் கையால் தாக்கினார். 

    இதுகுறித்து பூமாதேவி முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×