search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவீன பூங்கா அமைய உள்ள இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஊர் பொதுமக்களுடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    நவீன பூங்கா அமைய உள்ள இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஊர் பொதுமக்களுடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

    7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

    ஆக்கிரமிப்பில் இருந்த 7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு பூங்கா அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஒட்டிய தமிழக பகுதி ஸ்ரீராம் நகர். திருச்சிற்றம்பலம் ஊராட்சிமன்ற எல்லைக்கு உட்பட்ட அந்தப் பகுதியில் புதுவை தமிழகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

    இந்த பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம் போக்கு இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தினை செயல்படுத்த, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன், வானூர் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் எடுத்துரைத்தார். 

    இந்நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் தற்போது ஒரே பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 7 ஏக்கர் புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது. 

    அந்த இடத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, நாடகமேடை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய ஒருங் கிணைந்த பூங்காவை உருவாக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்த திட்டத்தால் நாவர்குளம், அன்னை வேளாங்கண்ணி நகர், வசந்தபுரம், ஸ்ரீராம் நகர், மாட்டுக்காரன் சாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவார்கள். 

    அரசு பொது இடத்தை தனியார் வசம் இருந்து மீட்டு தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் நவீன பூங்கா அமைத்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    Next Story
    ×