search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை பொறியாளரிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
    X
    தலைமை பொறியாளரிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    கால்வாய் மீது பாலம் அமைக்க வேண்டும்-பொதுப்பணித்துறை அதிகாரியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு

    வேல்ராம்பட்டு-100 அடி சாலையில் கால்வாய் மீது பாலம் அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    புதுச்சேரி:

    வேல்ராம்பட்டு- 100 அடி ரோடு மரப்பாலம் சந்திப்பில் கால்வாய் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில்  கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிக்னலை கடக்க வாகன ஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. 

    இதற்கு முக்கிய காரணம் வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் இணைந்து 100 அடி சாலையை கடப்பதே ஆகும். 

    வேல்ராம்பட்டு சாலை மரப்பாலம் சந்திப்பு அடைவதற்கு சில அடி முன்னதாக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் 100 அடி சாலையில் வந்தடைந்து சாலையை கடந்து பெட்ரோல் பங்க் வழியாக வெளியேறி செல்கின்றது. 

    வேல்ராம்பட்டு முதல் 100 அடி சாலை வரையிலான வாய்க்கால் 22.5 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யலாம். 

    இதன் மூலம் வேல்ராம் பட்டு வழியாக 100 அடி சாலையை கடப்பவர்கள் சிக்னலில் நிற்காமல் இந்த புதிய பாலம் வழியாக 100 அடி சாலையை அடைந்துவிடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும். 

    எனவே, வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்து ஏற்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×