என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புது மாப்பிள்ளை தற்கொலை?
சண்முகாபுரத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவியிடம் விசாரிக்க கோரி தங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் சுப்பிரமணியர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது42). இவர் பாண்லேவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயா(24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது.
கணவன்-மனைவி இருவரும் கோவிலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டின் வராண்டாவில் மின் விசிறியில் துப்பட்டா வால் தூக்கு போட்டு தொங்குவதாக அவரது மனைவி ஜெயா குடும்பத் தினரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரனின் தங்கை கலையரசி மற்றும் குடும்பத்தினர் உடனடி யாக தூக்கில் இருந்து ராஜேந்திரனை மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தங்கை கலையரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது அண்ணன் ராஜேந்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தூக்குபோட்டு தொங்கும் போது கால்கள் இரண்டும் மடிந்து இருந்தது என்றும் அப்போது அவரது மனைவி ஜெயா எந்தவித பதட்டமும் இல்லாமல் எப்போதும் போல சகஜமாக காணப்பட்டார்.
மேலும் தனது அண்ணன் இறந்தும் அவரது மனைவி ஜெயாவை அவரது பெற்றோர் உடனடியாக அழைத்து சென்று விட்டனர். எனவே ஜெயாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கலையரசி புகாரில் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






