என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்தில்நாதன்
லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கி.செந்தில்நாதன் (37) இவர் செம்பதனிருப்பு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரா.செல்வராஜ் பட்டா மாற்றம் செய்ய கடந்த 23 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பதிவு செய்துவிட்டு வி.ஏ.ஓ செந்தில்நாதனை அனுகினாராம். அப்போது விஏஓ பட்டா மாற்றம் செய்து தர
ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்வராஜ் நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.ஐந்தாயிரம் பணத்தில் ரசாயனப் பொடி தடவி செல்வராஜிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதனை விஏஓ செந்தில்நாதனிடம் வழங்கிட, விவசாயி செல்வராஜ் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது விஏஓ செந்தில்நாதன் சட்டநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
விவசாயி செல்வராஜ் வி ஏ ஓ செந்தில்நாதனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் அப்போது தான் சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற செல்வராஜ் தான் எடுத்து வந்த ரசாயனப் பொடி தடவிய பணத்தை விஏஓ செந்தில்நாதனிடம் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சித்திரைவேலு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், மற்றும் போலீசார் வி.ஏ.ஓ செந்தில்நாதனை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு தனிஅறையில் வைத்து சுமார் 3மணிநேரத்திற்கு மேல் விசாரனை செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து செந்தில்நாதனை கைது செய்து அழைத்துக்கொண்டு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story






