என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
ஏரியில் பிணமாக மிதந்த இன்ஸ்பெக்டரின் மகள்
ஏரியில் பிணமாக மிதந்த இன்ஸ் பெக்டரின் மகள் உடலை மீட்டு விசாரணை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் இன்ஸ் பெக்டராக உள்ளார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2&வது மகள் காவியா (எ) கார்முகில் (16).
இவர், சென்னையில் தனியார் பள்ளியில் பிளஸ்&1 படித்து வந்தார். இவரது சகோதரி பிளஸ்&2 படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக மன அழுத்தம் ஏற்பட்டதால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கார்முகில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கார்முகிலை திடீரென காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங் களில் தேடியும் கிடைக் கவில்லை.
இந்நிலையில் சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள ஏரியில் சடலமாக கார்முகில் மிதந்துள்ளதை பார்த்த அப்பகுதியினர், இரும்புலிக் குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்முகில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் இன்ஸ் பெக்டராக உள்ளார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2&வது மகள் காவியா (எ) கார்முகில் (16).
இவர், சென்னையில் தனியார் பள்ளியில் பிளஸ்&1 படித்து வந்தார். இவரது சகோதரி பிளஸ்&2 படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக மன அழுத்தம் ஏற்பட்டதால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கார்முகில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கார்முகிலை திடீரென காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங் களில் தேடியும் கிடைக் கவில்லை.
இந்நிலையில் சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள ஏரியில் சடலமாக கார்முகில் மிதந்துள்ளதை பார்த்த அப்பகுதியினர், இரும்புலிக் குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்முகில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






